மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
Author: Editorial Staff
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க இந்த அறிவிப்பை விடுத்தார். இந்த உறுதிமொழியை மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு அரசு துணை சொலிசிட்டர் ஜெனரலை கேட்டுக் கொண்டது. அதனை ஏற்றுக்கொண்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பின்னர் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தாய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தைக்கு வழங்கிய உணவு தொண்டையில் சிக்கிக் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை – பிரிட்வெல்வத்த பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த அசம்பாவித சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு வயது குழந்தையே உயிரிழந்துள்ளார். 26 வயதுடைய தாய் உணவை தயாரித்து தனது கைக்குழந்தைக்கு கொடுக்கும் போதே வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், வீட்டினுள் பெண் விழுந்து கிடப்பதைக் அயலவர்கள் அவதானித்துள்ள நிலையில், குழந்தையும் தனது தாயைக் கட்டிப்பிடித்தவாறு இருந்துள்ளது. பின்னா் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. உணவு அருந்தி கொண்டிருந்த குழந்தையின் தொண்டையில் உணவு சிக்கியதால் இந்த பரிதாப மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாா் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் தாயான 26 வயதுடைய பெண் சில காலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை…
இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) காலை கொழும்பில் ஆரம்பமானது. ஆசியான் நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இந்த பேச்சுவாா்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸெல்ல பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சறுக்கிச் சென்று சொகுசுப் பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துடன், சொகுசு பஸ் முன்னோக்கிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 314.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.83 ரூபாவாகவும் காணப்படுகிறது. அதேசமயம், கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 240.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 226.09 ரூபாவாகவும் காணப்படுகிறது. இதேவேளை, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 344.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை பெறுமதி 401.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தொிவிக்கப்படுகிறது. இந்த இளைஞன் நேற்று (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்று, நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தை உடனடியாக பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு சவூதி அரேபியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலான கோரிக்கைகள் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்று வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை. பயனாளிகளின் பாவனைக்கு இந்த வீட்டுத் திட்டம் கையளிக்கப்படாமையினால் வீட்டுத் திட்டம் பற்றைக் காடாக மாறியுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியாவினால் 500 வீடுகளைக் கொண்ட மன்னர் அப்துல்லாஹ் மாதிரி நகரமொன்று அம்பாறை மாவட்டத்தின் நுரைச்சோலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டது. கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கான சவூதி தேசிய பிரச்சாரம் என்ற நிறுவனத்தினாலேயே இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் சவூதி உள்துறை அமைச்சின் கீழ் காணப்பட்ட இந்த நிறுவனம்- இன்று, நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான…
# இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொண்டுள்ளார். இதன்படி பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் மற்றுமொரு விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர, தப்பிச் சென்று பிடிபட்ட கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் கைதி தொடர்பான ஆவணங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் சீருடையை கைதி அணிந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்றுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் குழுவினால் கைதி மருதானை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளுர் சந்தையில் தேவைக்கு ஏற்ப மரக்கறிகள் வரத்து இன்மையால் மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாயாகவும், கறி மிளகாய் 580 ரூபாயாகவும், போஞ்சி 600 ரூபாயாகவும், கரட் 530 ரூபாயாகவும், வெண்டைக்காய் 320 ரூபாயாகவும், பீட்ரூட் 480 ரூபாயாகவும், தக்காளி 240 ரூபாயாகவும், சில்லறை விலையில் விற்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பச்சைமிளகாய் விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதுடன், சில வர்த்தக நிலையங்களில் பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.