பொன்னியின் செல்வன் படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி கொண்டாட வேண்டிய ஒரு படம்.
அமரர் கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ள மணிரத்னம் 2ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம்.
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் இந்திய ரூ. 80 கோடி வரை வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் இந்திய ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளது. இலங்கை நாணயப்படி சுமார் 13 பில்லியன்கள் ஆகும்.
படக்குழுவினர் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.