Author: admin

கொழும்பு துறைமுகத்தின் குறுக்கே செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த சிலர் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

புத்தளம் பாலாவியில் இருந்து அருவக்கல் சுண்ணாம்பு குவாரிக்கு சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து, புத்தளம் குருநாகல் வீதியில் ரயில் நிறுத்தப்பட்டதால் அந்த வீதியின் போக்குவரத்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் முற்றாக நிறுத்தப்பட்டதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளத்திலிருந்து பாலாவிக்கு சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற ரயிலின் இயந்திரமே தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் நகரின் ஊடாக சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தீப்பிடித்ததாகவும், ரயில் சாரதி உடனடியாக இயந்திரத்தை நிறுத்தியதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் குருநாகல் பாதையை தடை செய்யும் வகையில் புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டதால் பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊராபொல பிரதேசத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலக்கு வருவாயை விட 105% அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று ஒரு தேசிய நாளிதழில் முதல் காலாண்டில் எதிர்பார்த்த வருவாயில் 19% மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கூறினார். மேலும், முதல் காலாண்டில் சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயில் 89% ஈட்டியுள்ளதாகவும், மதுவரி திணைக்களம் 64% வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More

எம்பிலிப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சிறுவர் பராமரிப்புப் பிரிவில் (SBU) போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல உயிர்காக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு நீண்டகாலமாக தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர் எம்பிலிபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலை இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதான வைத்தியசாலையாகும். ஊவா மற்றும் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளமையினால், தினமும் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சப்ரகமுவ மாகாண சபையின் கட்டுப்பாட்டில் இருந்த எம்பிலிப்பிட்டி வைத்தியசாலை, மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் மாவட்ட பொது வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர், மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். அவற்றுள், விசேட சிறுவர் பராமரிப்புப் பிரிவில் உள்ள குறைபாடுகள் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேலும்…

Read More

அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வேன் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று வரையில் காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் 2.5 பில்லியன் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகள் மட்டுமே நமக்குப் போதுமானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததிக்காக நல்லதொரு நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். அதற்காக அவர் 2048 யும் வெற்றிகொள்வார். இவற்றை நமக்காகவே செய்கிறார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக காணப்பட்ட நிலைமையை தலைகீழாக மாற்றியவரும் அவரேயாவார். எதிர்க் கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வது மாத்திரமே நோக்கமாக இருந்தாலும் 2048 அடுத்த சந்ததிக்கான அபிவிருத்தி அடைந்த நாட்டினை உருவாக்குவதே எமது நோக்கமாகும். ஐக்கிய தேசிய கட்சியை ஒருவராலும் வீழ்த்த முடியாது. அதனால் அடுத்த ஆறு…

Read More

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ். லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பொது நிர்வாக சுற்றறிக்கை 10/2000 க்கு அமைவாக கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கியதான ஆலோசனைக் குழுக்களை தாவிப்பதன் மூலம் அவற்றின் காரியத்துரனையும் உற்பத்தி பெருக்கத்தையும் மேம்படுத்த செய்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரச பேருந்துகளில் பயணிப்பதற்கான இலவச பஸ் பாஸ் நடைமுறையை அமுல்படுத்துமாறு மாகாண ஆளுநரை கோரல். அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் அரச அலுவலர்களுக்கு மாதவிடாய்…

Read More

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 6 பேர் காரில் பயணித்த நிலையில் 2 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடையும் நிலையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முன்பு சேவையாற்றிய மற்றும் தற்போது சேவையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Read More

இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி உத்தியோகபூர்வ பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய விமானப் படை பிரதானி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உப்பை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நலப் பாதிப்பு குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவில் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்ளல் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் WHO எச்சரித்துள்ளது. ஒரு டுவிட்டர் காணொளியில் இதனை கூறியுள்ள WHO, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பினை உட்கொள்ளலுக்காக எடுத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. முதியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டியை விட குறைந்தளவு உப்பை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள உப்பு உட்கொள்ளலில் கவனம் செலுத்துமாறு WHO கேட்டுக் கொண்டுள்ளது.

Read More