Author: admin

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று காரை முந்திச் செல்ல முற்பட்டு லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எதிரே வந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி பின்னர் அவர் காரின் சில்லில் சிக்கியுள்ளார். அப்போது அப்பகுதி மக்கள் சேர்ந்து காரை தூக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மீட்டனர். பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Read More

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (20) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதாவது 100,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் கிடைத்துள்ளது. 120,000 மெட்ரிக் டொன் எடை கொண்ட இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் அடுத்த வாரம் வரவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி, அடுத்த 40 நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் அதிகபட்ச திறனில் செயல்பட முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

Read More

கட்டுப்பாட்டில் இருந்த கோவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக நாட்டில் நிலவும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டினால் முன்பைப் போன்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், அதன் காரணமாக மிக அவசியமான சூழ்நிலைகளுக்கு மாத்திரமே பீசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்பு ஒரு நாளைக்கு 25,000 பீசிஆர் பரிசோதனைகள் வரை சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவினூடாக, மருந்து தட்டுப்பாடு பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான உதவியை வழங்க எதிர்பார்ப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Read More

இந்திய கடன் உதவிக்கு ஏற்ப 21,000 மெட்ரிக் டொன் யூரியாவை ஏற்றிய கப்பல் நேற்று (19) இரவு இலங்கையை வந்தடைந்தது. தேயிலை மற்றும் சோளம் பயிர்ச்செய்கைக்கு இந்த உரம் பயன்படுத்தப்படும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். ‘சிறு தேயிலை அபிவிருத்தி அதிகார சபையின்’ ஊடாக தேயிலை விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படும். இதன்படி, தேயிலை விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உர மூட்டையை தலா 15,000 ரூபா விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜேகுணவர்தன தெரிவித்தார். மக்காச்சோள விவசாயிகளுக்கு வேளாண்மை வளர்ச்சி மையங்கள் மூலம் உரங்கள் வழங்கப்படும். இந்திய கடன் உதவியின் கீழ் 65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் 40,000 மெட்ரிக் டொன்கள் முன்னரே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

Read More

அலரி மாளிகைக்குள் பிரவேசித்து, அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 50 பேரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர். கொழும்பு தெற்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களின் புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளன. இந்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அதனை 0112421867 அல்லது 0763477342 அல்லது 1997 எனும் இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பு புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நடைபெற்றது. அங்கு, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதிகளைக் கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்யப்பட்டது.பல பாதசாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி, சிவப்பு சமிக்ஞைகள் எரியும் போது சாலையைக் கடப்பதைக் காண முடிந்தது. மேலும் அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வீதியைக் கடப்பது குறித்து காவல்துறையினரிடமிருந்து கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறி வீதிகளைக் கடப்போரின் அடையாள அட்டை மற்றும் பிற விபரங்கள் கணினிமயமாக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறுவார்களாயின் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read More

அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்போது, நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 140 ரூபாவேனும் வழங்க வேண்டும் என தனியார் அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கடந்த போகத்தில் உரத்துக்காக அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக ரத்ன அரிசி நிறுவனத் தலைவர் மித்ரபால லங்கேஸ்வர தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கம் 120, 125, 130 ரூபா என்ற விலையில் நெல்லை கொள்வனவு செய்கிறது. மத்திய அளவான அந்த விலை, விவசாயிகளுக்கு போதுமானதல்ல. 140, 150 ரூபா வழங்க வேண்டும் என்றே விவசாயிகள் கூறுவதை ஊடகங்கள் வாயிலாக அவதானிக்க முடிந்தது. அவ்வாறு வழங்காவிட்டால், பெரும்போகத்தில் விவசாயிகள் எவ்வாறு பயிர்ச்செய்கையில் ஈடுபடுவார்கள் என்பது தெரியாது என்ற நிலையே உள்ளது. எனவே, நெல்லுக்கான விலையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என ரத்ன அரிசி நிறுவனத் தலைவர் மித்ரபால லங்கேஸ்வர தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் நெல்லுக்கு அதிக விலையை பெற்று தருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்திருந்தார்.

Read More

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தடுமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிப்புரையை அடுத்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Read More

COVID-19 தடுப்பூசியின் பாதகமான பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படாததால், கூடிய விரைவில் நான்காவது டோஸைப் பெறுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது. நான்காவது டோஸை இதுவரை குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பெற்றுக்கொண்டுள்ளதாகவும், மேலும் மூன்றாம் டோஸையும் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இப்போது தினமும் 100க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், பொதுமக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்களைப் பெறாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்றும் அவர் விளக்கினார்.

Read More