Author: admin

எதிர்காலத்தில் விஞ்ஞான பீட கற்பித்தல் டிப்ளோமாவை நான்கு வருடங்களாக நீடித்து பட்டப் படிப்பாக அபிவிருத்தி செய்து டிப்ளோமா முடித்த ஆசிரியர்களுக்கு பட்டதாரியாக அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்று நடைபெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேல் மாகாணங்கள் மற்றும் தேசிய பாடசாலைகள் தொடர்பான 2355 ஆசிரியர் நியமனங்கள் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டதுடன், எஞ்சிய ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டன. அரசு மற்றும் பிற சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பாக கல்வித்துறைக்கு சொந்தமான பகுதியை நடைமுறைப்படுத்த தேவையான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Read More

நாடளாவிய ரீதியில் இன்று (16) காலை 08 மணி முதல் அரச மருந்தாளர் சங்கம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் 23 மருந்தாளா்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சித்தி பெறுகின்றனரா? அல்லது நுான சித்தி (failed) அடைகின்றனரா? என சோதிப்பதா? அல்லது வேறு முறைப்படி பரீட்சை நடத்தப்பட வேண்டுமா? என்பதை எதிர்காலத்தில் பரிசீலிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (16) முற்பகல் அலாி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் இடம்பெற்ற பிரதான நிகழ்வை ஒட்டி, நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களிலும் 7,342 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளுக்கு 1,729 ஆசிரியர்களும் மேல் மாகாண பாடசாலைகளுக்கு 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

Read More

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை நேற்று ரூ. 315.31 இன்று ரூ. 301.69. விற்பனை விலையும் குறைந்துள்ளது. நேற்று ரூ. 333.97 இன்று ரூ. 319.54. கொமர்ஷல் வங்கி அமெரிக்க டாலரின் வாங்கும் விலை ரூ. 296.92 விற்பனை விலை ரூ. 320. சம்பத் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 301, விற்பனை விலை ரூ. 318

Read More

தொம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்றைய தினம் திடீர் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரம் அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 159 ஆயிரம் என்ற மட்டத்திலிருந்தது. இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க…

Read More

அனுராதபுரத்திற்கும் ஓமந்தேவிற்கும் இடையிலான புகையிரத சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கோட்டையில் இருந்து காங்கசந்துறை வரையிலான ரயில் பயணங்கள் வழமையான கால அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அநுராதபுரத்திற்கும் ஓமந்தேவிற்கும் இடையிலான ரயில் பாதை கடந்த ஜனவரி மாதம் தண்டவாள திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐக்கிய இராச்சியத்தில் (UK) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5 பேர் நாடு திரும்பத் தவறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவில் இருந்து ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு திரும்பவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். காணாமல் போன பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

தியத்தலாவையில் இன்று(16) காலை இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ் என்பன, தியத்தலாவை காஹகல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

யாழ்ப்பாணம் மாரண்டன்கேணியில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More