Author: admin

முல்லேரியாவில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட காட்சிகள்:

Read More

அமெரிக்கவின் சபாநாயகர் நென்சி பெலோசி, சீனாவின் அச்சுறுத்தலையும் மீறி தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆசியாவின் சில நாடுகளுக்கு செல்லவுள்ள திட்டத்தில் அடங்கலாகவே அவர் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு செல்லவுள்ளதை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக தெரிவித்திருந்த நிலையில் சீனா அதற்கான தன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. “அமெரிக்க சபாநாயகர் தன்னுடைய ஆசியப் பயணத்தில் தாய்வானுக்குச் சென்றால் அமெரிக்கா அதற்குத் தக்க விலையைக் கொடுக்கும்” எனச் சீனா எச்சரித்திருந்தது. இருப்பினும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “தாய்வானுக்குச் செல்ல நென்சி பெலோசிக்கு உரிமை உண்டு” என நேற்று கூறியிருந்தார்.

Read More

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாள் நிகழ்வுகளை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இலங்கை தடகள வீரர் மற்றும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் காணாமல் போனதையடுத்து பர்மிங்காம் பெருநகர பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை முகாமில் இருந்து பெண் ஜூடோ வீரரும் இலங்கை ஜூடோ அணியின் முகாமையாளரும் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன என ‘அடா’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது. பெண் ஜூடோகா வீராங்கனை நேற்று தனது முதல் சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டு இலங்கையர்களும் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் காணாமல் போனது குறித்து இலங்கை அணி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தது. இதன் விளைவாக, இலங்கைக் குழுவின் செஃப்-டி-மிஷன் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) தம்பத் பெர்னாண்டோ, மேலும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இலங்கைக் குழுவின் அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் பெற்றுள்ளார். மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஜூடோ அணியுடன் பொதுநலவாய…

Read More

தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஜனாதிபதி பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். தனிமனித மற்றும் சமூக பாதுகாப்பு கருதி இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முல்லேரியா – கொட்டிகாவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் முல்லேரியா வங்கிச் சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Read More

பொதுநலவாய விளையாட்டுகளில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியின் முதல் சுற்றில் கயந்திகா அபேரத்ன 02 நிமிடங்கள் 01.20 வினாடிகளில் இலங்கை சாதனையை முறியடித்தார்.

Read More

சீரற்ற காலநிலையின் போது ஆற்றைக் கடக்க முயன்ற மக்கள் சங்கிலியின் ஒரு பகுதியாக இருந்தபோது நபர்கள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாவலப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு

Read More

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் இதுவரை 10 பேர் பலி.. வெள்ளத்தில் தத்தளித்த காட்டு யானை.. அலைகளின் சீற்றத்தால் கடலில் விழுந்த 4 பேர்.. தற்போது நிலவரம் என்ன?

Read More

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஓகஸ்ட் 03 முதல் 05 வரை 3 மணி நேர மின்வெட்டுக்கு பின்வருமாறு ஒப்புதல் அளித்துள்ளது. குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW: பகல் நேரத்தில் 1-மணிநேரம் மற்றும் 40-நிமிடங்கள் இரவில் 1-மணிநேரம் 20-நிமிடங்கள் குழு CC: காலை 6.00 மணி முதல் காலை 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் குழுக்கள் MNOXYZ: காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம்

Read More

தென்மேற்கு பருவக்காற்று செயற்பாட்டில் உள்ளதால் சில இடங்களில் 100மிமீ வேகத்தில் பலத்த மழையும், சில இடங்களில் மணிக்கு 50கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். கடந்த 24 மணித்தியாலங்களில் நோர்டன் (நுவரெலியா) பகுதியில் 243.2 மி.மீ பாரிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Read More