Author: admin

தற்போதைய சூழ்நிலையில் புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள போதும், ரமழான் தினமான நாளை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், நாளை மறுதினம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

Read More

அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தாள் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கட்டணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அச் சபையின் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் இ-பில்லிங் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தண்ணீர் கட்டணத்தைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டளவில் 41.7 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அரச நிறுவனங்களின் நிலுவைத் தொகை 2021ஆம் ஆண்டளவில் 161.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்களில் 33.2 பில்லியன் ரூபாவை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே போகவிடாமாலும் வெளியிலிருந்து மாணவர்கள் வளாகத்திற்குள் செல்லவிடாமலும் வாசல் கதவை நிர்வாகம் இன்று திங்கட்கிழமை (02) காலை 9 மணிக்குப் பூட்டியதுடன் விடுதியில் தண்ணீர், மின்சாரத்தை தடை செய்துள்ளதையடுத்து நீதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த 29ஆம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து அங்கு விரிவுரையாளரை தடுத்துவைத்து மாணவர்கள் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் குறித்த பிரச்சினை தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு பெற்றுத்தரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது . இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அதில் உடனடியாக மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் உடனடியாக வெளியேற முடியாத சூழல் இருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினை…

Read More

தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தொழிற்சங்கம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனமும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியன் எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகியுள்ளது.

Read More

நாடுபூராகவும் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதால், அவசர சத்திரசிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாடுபூராகவுமுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு காணப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனவே நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துச் செல்லும் மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. எனவே மருந்துகளையம் வைத்திய உபகரணங்களையும் இலங்கைக்க நன்கொடையாக வழங்குமாறு வெளிநாடுகளிலுள்ள இலங்கையரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது. நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Read More

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்குரிய சோதனைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் ஒரு மாதத்திற்கு சுமார் 60,000 ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதாகவும், டிசம்பர் 2021 முதல் புதிய ஓட்டுநர் அட்டைகளை அச்சிட்டு வழங்க முடியவில்லை என்றும் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஒரு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்களை வழங்குவதற்கு தேவையான டொலர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Read More

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் பல்பொருள் அங்காடிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல், பல்பொருள் அங்காடிகள் மூலம், நுகர்வோருக்கு உரிய அரிசி தொகை கிடைக்கும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது நுகர்வோர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அந்த அரிசி வகைகளின் சில்லறை விலை வருமாறு, 👇👇👇 📌ஒரு கிலோ நாட்டு அரிசி – ரூ.145.00 📌ஒரு கிலோ சம்பா அரிசி – ரூ.175.00

Read More

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், ‘திட்டமிடல் தொடர்பான ஒரு வாக்குவாதம், இது ஒரு தவறான புரிதல் என்பதால் இருவரும் பிரச்சினையை தீர்த்துக்கொண்டனர்,’ என்று ஒரு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்றிரவு இந்த சம்பவம் தொடர்பாக தனது தனிப்பட்ட முகநூலில் பின்வரும் செய்தியை வெளியிட்டிருந்தார். ‘நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், கடின உழைப்புக்குப் பிறகு வேறு யாரும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள், மரியாதை இரண்டு வழிகளிலும் இருக்க வேண்டும் எனவும் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று வெளியாகி…

Read More