Author: admin

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

2021 க.பொ.த சா/த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளை திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளாத பரீட்சார்த்திகள், WWW.DOENETS.LK ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று, NIC இலக்கம் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தர்மசேன அறிவுறுத்தினார்.

Read More

நாடு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இந்த மாதத்தில் இதுவரையில் 2,797 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Read More

போனி கபூர் கொடுத்த அப்டேட் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் – வினோத் – போனி கபூர் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில் மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் AK 61 படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் AK 61 படத்தின் 35 நாள் ஷூடிட்ங் முடிந்துள்ளதாகவும், தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் பேசியுள்ளார். (Cineulagam)

Read More

இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளைய தினம் (17) செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மற்றொரு கப்பல் நாளை மறுநாள் நாட்டை வந்தடைய உள்ளது. இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் தினசரி 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் நாளை (17) முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Read More

இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடல் மைதானத்திலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது. இந்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக லங்காதீப செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கைது செய்யப்படும் நபர்களில் அடங்குவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

நாட்டில் இடம்பெற்ற பல வன்முறைச்சம்பவங்களையடுத்து பாராளுமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை இரட்டிப்பாக்க பாதுகாப்புத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் இன்று (16) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே பாராளுமன்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஓயா பகுதியில் கடற்படையினரின் ரோந்து பணிகளும், பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்படவுள்ளன. மேலும், உளவுத்துறை கண்காணிப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது. பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படைகளின் அதிகாரிகளையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (15) பாராளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்தார். இதன் பாதுகாப்பு தொடர்பாக அவர் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த…

Read More