Author: admin

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 09 வயது சிறுமியின் சடலம் நேற்று அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் சிறுமி ஒரு சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக விசாரணை நடத்திய போலீஸ் குழுக்கள் தெரிவித்துள்ளன. நேற்று (27) காலை 10:00 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு கோழிக்கறியுடன் சென்ற சிறுமி காணாமல் போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

Read More

நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள மயக்க மருந்துகளில் ஒரு தொகை, பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மூன்று மாதங்களுக்கு போதுமானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், நோயாளர் பராமரிப்பு சேவைகள் சிக்கலின்றி முகாமைத்துவம் செய்யப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, வைத்தியசாலையில் தற்போது பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளை விரைவாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். இதேவேளை, வைத்தியசாலையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பான அறிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More

நெல் வயல்களில் இதுவரை பயிரிட முடியாத பச்சை பயிரை பயிர் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இம்மாதப் பருவத்தில் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலத்தில் 50% க்கும் அதிகமான நிலப்பரப்பு தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா கூறுகையில், தற்போது 261,000 ஹெக்டேயர் நெல் வயல்களில் பயிரிடப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு 500,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை யாலப் பருவத்தில் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, உரம் கிடைக்காமல் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மாபலகம விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அங்கக உரங்கள் கிடைத்தாலும், அந்த உரம் தரமற்றது என நிரூபணமாகியுள்ளதாக கூறுகின்றனர்.

Read More

2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் அரசாங் கம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்தாலும் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. பரீட்சை முடிவடைந்தவுடன் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மீது ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் பெரும் நிதிச்சுமைகளை சுமத்தி யுள்ளதாக தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னரும் தொடரும் போராட்டங்கள் மூலம் ராஜபக்ஷக் களின் எதேச்சதிகாரத் தலைமை முடிவுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

பிரபலத்தின் திருமணம் இந்த தொடரின் ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் மகளாக Sruthi நடித்து வந்தார், பின்னர் சில மாதங்களிலேயே அவரது Track காணாமல் போனது. தற்போது Sruthi க்கு அரவிந்த் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படங்கள் வெளியாகியதும் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Read More

நாட்டிற்கு நாளைய தினம் (29) டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று வரவுள்ளதாக “எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர” தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரித்துள்ளார். மேலும், கச்சா எண்ணெய் தொகையொன்று தற்போது தறையிறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நாட்டில் தற்போது 17,077 மெட்ரிக் தொன் டீசலும், 1,072 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும், 37,391 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் மற்றும 6,142 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் இருப்பில் உள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 23,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதை உறுதி செய்யுமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read More

சேவை தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண: குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவில் இருந்து தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம். – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த: தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் – பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கே சில்வா: கிழக்கு மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்கு மறைமுகமாகப் பங்களிக்கின்றனர், இருப்பினும் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி. பால் அடுத்த மாதத்திற்குள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1.2 மில்லியன் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார். தற்போது 90 சதவீதமான கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். 800,000 முதல் 900,000 வரையிலான பணியாளர்கள் கட்டுமானத் துறையின் மூலம் நாட்டிற்கு நேரடியாகப் பங்களிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Read More