Author: admin

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணதில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு மக்களின் வாழும் உரிமையை பறித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மக்களின் போராட்டங்களை அடக்கி ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது என்பதோடு போராட்டம் ஒரு நாள் இந்த அரசாங்கத்தை அழித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓபன் டென்னிஸ் முதல் அரையிறுதி போட்டியில் இருந்து பிரிட்டனின் கேட்டி ஸ்வான் விலகியுள்ளார். போலந்தின் மக்டா லினெட்டிடம் 3-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்வான், 16 நிமிடத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ உதவியை நாடினார். எவ்வாறாயினும் மீண்டும் விளையாடக்கூடிய அளவிற்கு அவரது உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி இடம்பெறவுள்ளது. இதில் 17 வயதான செக்குடியரசு வீராங்கனை லிண்டா, போலந்து வீராங்கனை மக்டா லினெட்டை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தணை அறிக்கையிடல் சட்டத்தின் படி குறித்த அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அபராத தொகையை தீர்மானிக்கும் போது, சட்டத்தை மீறி செயற்பட்ட தன்மை மற்றும் அதன் துரிதத் தன்மை கருத்தில் கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

Read More

எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அகுனுகொலபொலஸவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிக்லாவில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உரம் ஒரு மூட்டை வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

Read More

அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எனவே, அரசு நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். உதாரணமாக, அரசாங்கம் 2020 இல் 60,000 பட்டதாரிகளை பொதுச் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்தது. எனினும் அவர்களில் பலர் பட்டதாரிகளுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த பட்டதாரிகளை கொண்டு அரச துறையில் உள்ள வெற்றிடங்களை அரசாங்கம் நிரப்ப முடியும் என அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி மேலாண்மை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். மேலும் மாவட்ட அளவில் பெண்களுக்கான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். குடும்ப வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு 1938 என்ற தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் குறித்த சேவை 24 மணி நேரமும் இயங்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

Read More

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவிலான தனிநபர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரு வெளிநாட்டு வேலையின் நோக்கத்திற்காக கடவுச்சீட்டு அல்லது தேவையான நிதியை வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட அமைப்பு மற்றும் அதன் உரிமத்தின் சட்டபூர்வமான தன்மையை தீர்மானிக்க உறுதிப்படுத்தல்களைப் பெற வேண்டும் என கூறினார். மோசடி செய்பவர்களின் தகவல்களைப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Read More

அஜர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தின் பிரிஞ்சி ஷாசெவன் கிராமத்திற்கு அருகில் அஜர்பைஜான் ஸ்டேட் பார்டர் சர்வீஸின் ஹொராடிஸ் எல்லைப் பகுதியில் ஈரானுடனான மாநில எல்லையை கடக்க முயன்றபோது நான்கு இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக டிரெண்ட் செய்தி வெளியிட்டுள்ளது சேவையின் படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள குடிமக்கள் – முன்பு தோஹா மற்றும் துபாயிலிருந்து அஜர்பைஜானின் பாகுவுக்கு வந்தனர். ஈரானின் எல்லை வழியாக, எல்லை மீறுபவர்கள் துர்கியேவுக்குச் செல்ல விரும்பினர், அங்கிருந்து – ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. சட்டவிரோத இடம்பெயர்வின் சேனலைக் கண்டறிந்து மூடுவதற்கான செயல்பாட்டு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று சேவை மேலும் கூறியது.

Read More

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகே இலங்கையின் இயற்கைப் படங்களைப் பகிர்ந்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர், “நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது! எங்கள் தீவு மிகவும் மாறுபட்டது மற்றும் அழகானது. படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் வலியுறுத்திய சங்கக்கார, பார்வையாளர்களுக்காக இலங்கை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டார். “எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால், நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி, சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பயண ஆலோசனைகளை உயர்த்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் பதிவு செய்யலாம். துரதிர்ஷ்டவசமாக, கெட்ட…

Read More