Author: admin

மக்காவில் இன்று மாலை ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டதால் அங்கு ரமழான் மாதம் 29 உடன் நிறைவு செய்யப்பட்டது. சவூதி அரேபியாவில் நாளை புனித நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. # இலங்கையில் நாளை (21) மாலை பிறை பார்க்கப்படவுள்ளது

Read More

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று நோயாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மருந்துகளும் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 48 மணித்தியாலங்களின் பின்னர் கிடைத்த அறிக்கைக்கு அமைய, நோய்த்தொற்றுக்கு காரணமான மருந்து கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நிலையங்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அடிப்படையில், கண் வைத்தியசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தேசிய கண் வைத்தியசாலையின் பேச்சாளர் கூறினார். இதேவேளை, சர்ச்சைக்குள்ளான…

Read More

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் “ஹெல்ப் அபேக்ஷா” இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் பினர ஜயவர்தன தெரிவித்துள்ளார். மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, அபேக்ஷா வைத்தியசாலைக் குழுவின் உப தலைவர் குமாரி வன்னியாராச்சி தனது பிறந்தநாளை முன்னிட்டு வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கினார். மேலும், எடேரமுல்லை லயன்ஸ் கழகமும் மருத்துவமனையின் சிறுவர் பிரிவில் பெற்றோர் தங்கும் பகுதிக்கு குளிரூட்டும் அமைப்பை நிறுவுவதற்காக 425,000 தொகையும் இங்கு நன்கொடையாக வழங்கியது.

Read More

கொழும்பு – சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று புல்மோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. குறித்த பஸ் பாலத்தின் பக்கவாட்டு வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டது, இதனையடுத்து சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற லொறியும் குறித்த பஸ் மீது பின்புறத்தில் மோதியுள்ளது. சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள தென்னந்தோப்புக்கு மிகப்பெரிய சேதம் டோக் மக்காக்கள், குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் ஏற்படுகிறது. 2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 93 மில்லியன் தேங்காய்கள் குரங்குகள், மக்காக்கள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும், 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 180-200 மில்லியன் தேங்காய்களாக உயரக்கூடும் என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன. இந்த விலங்குகளினால் ஏனைய பயிர்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குரங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதை ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை அமைச்சரினால் அடுத்த வாரம்…

Read More

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் இணைப்பதற்காக விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி 20.04.2023 நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையீட்டு விண்ணப்பங்கள் https://g6application.moe.gov.lk/#/ ஐப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். www.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பாடசாலை விண்ணப்பம் தொடர்பான பள்ளிக் கணக்கெடுப்பு எண் (Census No.) கொண்ட ஆவணத்தைப் பெறலாம்.

Read More

எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளையும் ஒழுங்குபடுத்தும் டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அனைத்து பேருந்துகளையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் வசதி, வீதி அனுமதி வழங்கும் போது முன்பு வழங்கப்பட்ட புத்தகத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் அட்டை என்பன அறிமுகப்படுத்தப்படும்.

Read More

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 60 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட செனஹசே யாத்திரை இரண்டாவது நாளாக இன்று (20) தொடரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தீவிர மாற்றத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. கேகாலை, மாத்தறை, புத்தளம், அனுராதபுரம், பிபில, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து செனஹசே யாத்திரை கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் அமைப்பாளர் மஹில் பண்டார குறிப்பிட்டுள்ளார். செனஹசே யாத்திரை நாளை கொழும்பை வந்தடைய உள்ளது.

Read More

இந்த வருடம் நெற்செய்கைக்கான MOP உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது சந்தையில் MOP உரத்தின் 50 கிலோகிராம் மூடை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் அந்தத் தொகையை விவசாயிகளுக்கு ஏற்க சிரமமாக இருப்பதால் விலையைக் குறைக்கத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். குறைந்த விலையில் உரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் செயற்பட்டு வருவதால், இரசாயன உர விற்பனை தொடர்பில் சந்தையில் போட்டி உருவாகியுள்ளதோடு, இதன் மூலம் விவசாயிகள் பயனடைவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் TSP மற்றும் MOP ஆகிய உரங்களின் விலை மேலும் குறையும் என தனியார்…

Read More