Author: admin

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடருக்கான பிரதித் தலைவர் பதவியை இலங்கை பெற்றுள்ளது. இலங்கையின் பிரதித் தலைவர் பதவிக்கு 193 நாடுகள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கான பொருத்தமான பதவியை ஏற்பார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரதித் தலைவர் பதவிக்கு இவ்வருடம் இலங்கைக்கு மேலதிகமாக 21 நாடுகள் தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடர் செப்டம்பர் 12ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Read More

பல இளைஞர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் தேர்தல் மற்றும் அரசியலில் நம்பிக்கை இழந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. அவர்களில் எவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே பொருளாதார ‍நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். நுவரெலியாவில் நடைபெற்ற 2023/2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் நீடித்து வருகின்றது. இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது. இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையை இழந்து விடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கேற்ற வகையிலேயே இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என இதன்போது குறிப்பிட்டார். அரசு பெரும்பான்மையை இழந்த பின்னர் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். இதனால் இந்த வருடம் தேர்தல் வருடமாகவே அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Read More

இலங்கையில் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது என்பது கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்று ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்த கேள்விக்கே கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் இதனை கூறியுள்ளது. முன்னதாக ஜப்பானின் நிதியுதவியுடன் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலகு தொடருந்து திட்டத்தினை மீள ஆரம்பிக்க இலங்கை அமைச்சரவை இந்த வாரம் அனுமதி வழங்கியுள்ளது. மாலபேயை- கொழும்பு கோட்டையுடன் இணைக்கும் வகையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. முன்னைய நல்லாட்சிக் காலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 2020 செப்டம்பரில், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இந்த திட்டத்தை ரத்து செய்தது. இந்தநிலையில் அண்மையில் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்கும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜப்பானிய தூதரகம் கடனைத் தொடர்வது இலங்கைக்கு முக்கியமானது எனத் தெரிவித்துள்ளது.இருப்பினும் அனைத்து…

Read More

உணவு பொருள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விளம்பரங்களை புதிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தி கடுமையாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய உணவு பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை மூன்றாம் தரப்பினர் ஊடாக செய்யும்போது அதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உணவுச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Read More

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். வீசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும். அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாவாகும். 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

CPC மற்றும் LIOC ஆகியவை தொடர்ந்து எரிபொருளை நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருகின்றன மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இருக்கும். கடந்த வாரத்தில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் வைக்கப்பட்ட எரிபொருள் ஆர்டர்கள் மற்றும் பராமரிக்கப்பட்ட இருப்புகளின் தரவையும் CPC மதிப்பாய்வு செய்து வருகிறது. 121 எரிபொருள் நிலையங்கள் மே 27 முதல் 31 வரை எந்த ஆர்டரையும் செய்யவில்லை என்றும் மற்ற பல எரிபொருள் நிலையங்கள் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்க போதுமான ஆர்டர்களை வழங்கவில்லை என்றும் ஆரம்ப அறிக்கைகள் கண்டறிந்துள்ளன. CPC எரிபொருள் நிலையங்கள் குறைந்தபட்சம் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்குப் பிறகு நிறுத்தப்படும். 50% இருப்பு வைத்திருக்க வேண்டும். மே 27 முதல் CPC டீலர்களால் ஆர்டர்கள் மற்றும் தினசரி எரிபொருள் கொள்முதல் செய்யப்படாத எரிபொருள் நிலையங்கள் பட்டியல் கீழே

Read More

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும்…

Read More

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது,. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்கள் உட்பட 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்துள்ளது.

Read More