மூத்த பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே “அயுபோவேவ மகாராஜனேனி” பாடலை எழுதியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கைப் போரில் அரசு பெற்ற வெற்றியைப் பாராட்டி எழுதப்பட்ட பாடல், அப்போதைய அதிபர் ராஜபக்சேவை அரசராக சித்தரித்தது.

கடந்த காலத்தில் இருந்த இடத்தில் தற்போது இல்லை என்றும், தற்போது தேசத்தின் குழந்தைகளுடன் இருப்பதாகவும் பாடலாசிரியர் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்த பாடலை பாடிய சஹேலி கமகே அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தான் பாடிய பாடலும் நாட்டின் தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு பங்களிப்பதாக இருந்தால் பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பாடலின் வருமானம் அனைத்தும் ஊனமுற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காகச் சென்றதாக அவர் கூறினார்.

Share.
Exit mobile version