ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கலந்துரையாடினார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஆட்சியை மாற்றுமாறு கோரி கடந்த 4 நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடல் மைதானத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் பல பொது தளங்களை அமைத்து போராட்டம் இரவு பகலாக தொடர்ந்தது.

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தேசிய உரையொன்றை நிகழ்த்திய போதிலும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பதவி விலகுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தையும் குடிமக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ள தோல்வியடைந்த பொருளாதாரத்திற்கு ஜனாதிபதியையும் அவரது ஆட்சியையும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Share.
Exit mobile version