ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அமரபுர சமயத்தின் பிரதான சங்கநாயகமாக கடமையாற்றும் ஓமல்பே சோபித தேரரும் கலந்துகொண்டார்.

வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் இன்று பிக்குகள் குழுவுடன் போராட்ட இடத்திற்கு வருகை தந்து நாட்டு மக்களுடன் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தேரர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மகாநாயக்க தேரர்களின் முன்மொழிவுகளில் புதிய அரசாங்கம் மற்றும் பிரதமரை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன.

ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடமே தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை பிக்குகள் குழுவினர் கையளித்துள்ளனர்.

Share.
Exit mobile version