இந்தியாவில் இருந்து 11,000 மெற்றிக் தொன் அரிசி இன்று (12) ‘சென் குளோரி’ என்ற கப்பலில் கொழும்பை வந்தடைந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த அரிசி கையிருப்பு வந்துள்ளது.

இந்த 16,000 மெட்ரிக் தொன் அரிசி கடந்த வாரத்தில் மட்டும் இலங்கைக்கு இந்தியாவின் பல்முனை ஆதரவின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசேட பிணைப்பைக் குறிக்கும் இந்த விநியோகங்கள் தொடரும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது

Share.
Exit mobile version