வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து பிரியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்த போதிலும், இன்று மாலை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்ததன் பின்னர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான 41 எம்.பி.க்கள் சுயேச்சைக் குழுவிலிருந்து நாடாளுமன்றத்தில் இருந்து விலகிய 2வது எம்.பி.

முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

 

Share.
Exit mobile version