சிலாபத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று சிலாபத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஏனைய குழுக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையில் அரசாங்க சார்பு குழுவொன்று இடம்பெற்றது.

போராட்டக்காரர்களை கலைக்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

அரச சார்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட சம்பவத்தின் போது இரண்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version