மூன்று குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையில் இருந்து தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடியை அடுத்த அரிசல்முனையில் இன்று (10) 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் தஞ்சமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களிடம் தற்போது கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி பின்னர் மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

ஏற்கனவே ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அகதிகளாக தமிழகம் சென்று மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version