இலங்கையின் நிதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தொடர்ந்தும் பதவியேற்றுள்ளார் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சப்ரியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்காததால், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (04) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் சப்ரியும் அங்கம் வகித்தார்.

எவ்வாறாயினும், மறுநாள் (05) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியும் தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய முன்வந்துள்ளார், எனவே தற்போதைய பாராளுமன்றத்திற்கு வெளியே நிலைமையை கையாள ஜனாதிபதி பொருத்தமான நபரை நியமிக்க முடியும்.

செவ்வாய்க்கிழமை (05) அவர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இதுவரை நிதியமைச்சர் இல்லை.

விரைவில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) திட்டமிடப்பட்ட கலந்துரையாடலுக்கு இலங்கை நேரம் பற்றாக்குறையாக உள்ள வேளையிலும் இந்த இராஜினாமா வந்துள்ளது.

இதேவேளை, நேற்று (07) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 26 அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி ராஜினாமா செய்தது குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படவில்லை.

Share.
Exit mobile version