மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று அதிகாலை அகதிகளாக படகு மூலம் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.

மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த தம்பதியினர் தமது 10 வயதான மகள் மற்றும் இரண்டரை வயதான மகனுடன் படகு ஒன்றில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் நான்கு இலங்கை  தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மண்டபம் மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் காரணமாக இலங்கையர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக செல்லும் நிலைமை அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது.

 

 

Share.
Exit mobile version