கோட்டகோகம மற்றும் மைனகோகம அமைதிப் போராட்டத் தளங்கள் மீது மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

முன்னதாக, புதன்கிழமை (1) மகிந்த ராஜபக்சவை ஆணைக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை.

மேலும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று HRCSL தெரிவித்துள்ளது.

 

அதன் பின்னர், சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படும்.

Share.
Exit mobile version