தீவில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று காலை (01 ஜூன் 2022) மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாய பகுதிகளில் 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் சில தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதால், களு மற்றும் ஜின் ஆற்றுப் படுகைகளில் பெய்து வரும் கடும் மழையினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதால் கடற்படைக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பரகொட, பதுரலிய, புலத்சிங்கள, பெலவத்த பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, தெல்கொட, அயகம மற்றும் முவாகம ஆகிய நகரங்களுக்கும் மேற்கு கடற்படை கட்டளை நிவாரணக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளது. காலி மாவட்டத்தில் தவலம, ஹினிதும, நாகொட மற்றும் மாபலகம பிரதேசங்களுக்கு நிவாரணக் குழுக்கள்.

இன்று (ஜூன் 01) காலை முதல் களுத்துறையின் பரகொட மற்றும் கூடலிகம பிரதேசங்களிலும் காலி ஹினிதும பிரதேசங்களிலும் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் 25 வெள்ள நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையில் 05 குழுக்களும் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையில் மேலும் 10 குழுக்களும் உடனடி நடவடிக்கைக்காக கடற்படை தயார் நிலையில் வைத்துள்ளது.

Share.
Exit mobile version