அமைச்சகங்களின் கீழ் உள்ள செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய வர்த்தமானி 2022 மே 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை (31) வெளியிடப்பட்டன.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முதலீட்டுச் சபை, ஸ்ரீலங்கா டெலிகொம், போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட 42 முக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அமைப்புகள் உட்பட அனைத்து இராணுவக் கிளைகளும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் திறைசேரி, சுங்கம், கலால், மத்திய வங்கி மற்றும் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு உள்ளிட்ட 57 அரச அமைப்புக்கள் உள்ளன.

Share.
Exit mobile version