கொஸ்கொடவில் புகையிரதத்தில் மோதி ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கொஸ்கொட, பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இரண்டு சிறுமிகள் நடந்து சென்ற போது, மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் ஒரு சிறுமி மோதியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹகல்ல பியகம பிரதேசத்தில் வசித்து வந்த ஆறு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version