மின் கட்டணத்தனை மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் கட்டணங்களை திருத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version