நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிலவரம் தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது முன்வைக்கப்படும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version