இரசாயன உரத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கரிம உரத்திற்கு மாற்றத்தை கட்டம் கட்டமாக மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லை எனவும், போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நியாயமான காரணம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் அதன் முன்னுரிமைகளை பொருத்தமானதாக அடையாளம் காணத் தவறிவிட்டது என்று திரு அமரவீர கூறினார்.

Share.
Exit mobile version