நீர் சுத்திகரிப்பு செய்யும் இரசாயனப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக குழாய் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை என சமூக ஊடக விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது தண்ணீரை சுத்திகரிப்பதற்கு தேவையான இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று சபையின் உதவி பொது முகாமையாளர் (ஆய்வக சேவைகள்) ஜயலால் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குழாய் நீர் தரமானதும் குடிநீருக்கு ஏற்றதும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Exit mobile version