நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் 27,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,000 டீசல் மற்றும் 10,000 லீற்றர் மண்ணெண்ணெய்யுடன் 137 பேர் கைது செய்யப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் அல்லது 3ம் தரப்பினரால் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 118, 119, அல்லது 1997 ஆகிய இலக்கங்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் விஜேசேஜார மேலும் தெரிவித்தார்.

 

Share.
Exit mobile version