முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டி பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதமரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பல அரச மட்ட அதிகாரிகளிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் சிலர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version