யுக்திய நடவடிக்கையின் மூலம் இன்று (04) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1038 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 67 பேரிடம், தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் போதைக்கு அடிமையான 43 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 417 கிராம் ஹெரோயின், 205 கிராம் ஐஸ் மற்றும் 722 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பட்டியலில் இருந்த 84 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version