அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த ஆண்டு 18 சதவீதம் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் நேற்று முன்தினம்(23.06.2023) வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கை,

மேலும், கடந்த வாரம் ரூபாவின் பெறுமதி தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி ஜப்பானிய யென்னுக்கு நிகராக 27.06 சதவீதத்தாலும், பிரித்தானிய பவுண்டுக்கு நிகராக 12.01 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய வங்கியின் அறிக்கையின்படி, யூரோவிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 15.02 சதவீதத்தினாலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 17.01 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version