தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மீண்டும் நீடிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. எனினும் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சிபாரிசுகள் எதுவும் இதுவரை அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் அரசியலமைப்புப் பேரவை திடீர் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் இல்லை என்றும் அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறான நிலையில் தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு இன்னுமொரு பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version