அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று (24) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பேருந்து நிலைய புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியில் வர்த்தகம் நிலையம் ஒன்றின் உரிமையை விரைவாக வழங்குவதற்காக கூறி இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

குறித்த இரு அதிகாரிகளையும் அவிசாவளை மாநகர சபையினுள் இலஞ்சம் பெறும் போதே கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version