பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் இருந்து சுமார் 65 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

கைப்பற்றப்பட்ட ஹெரோயின், 16,193 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நீண்ட விசாரணையின் போது, ​​கப்பலின் குளிர் கொள்கலன் பெட்டியொன்றில் இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version