நாட்டில் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 7 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 250 டொலர் அறவிடப்படும்.

மேலும் விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 14 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 டொலர் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version