2022 ஆம் ஆண்டில் 911,689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது வரலாற்றில் ஒரு வருடத்தில் வழங்கப்பட்ட அதிகூடிய கடவுச்சீட்டுகள் எண்ணிக்கை ஆகும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான செயற்திறன் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடவுச்சீட்டு தொடர்பான முன்னெப்போதும் இல்லாத தேவையை எதிர்கொண்டு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மனித மற்றும் பௌதீக வளங்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதன் மூலம் மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க ஊழியர்கள் இரவும் பகலும் உழைத்தனர்.

இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version