ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி, பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த மோசடியில் கிட்டத்தட்ட 50 பேர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முப்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் பதினைந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலரை ஏமாற்றிய பண மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறித்த சந்தேக நபர் மீது முப்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Share.
Exit mobile version