தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கும் வரை அந்த பணியாளர்களை சிங்கப்பூர் வழியாக தென் கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளாா்.

Share.
Exit mobile version