சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் (வட்டிவுட்டியில்) இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கதிர்காமம் இருந்து சம்மாந்துறை வழியினூடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version