இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட காலக்கெடு பின்வருமாறு:
வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமைகளில் – நள்ளிரவு 1 மணிவரையும்
ஞாயிற்றுகிழமை – நள்ளிரவு 12.30 மணிவரையும்.

எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சிகள் மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version