ராணுவத்தளபதி விகும் லியனகேயின் வேண்டுகோளின் பேரில் ராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை முப்படைகளின் தளகர்த்தர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில், இராணுவம் அனைத்து இராணுவ உறுப்பினர்களின் உணவுக்கான கொடுப்பனவுத் தொகையை தோராயமாக 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version