நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

“தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் தவிர, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர்களின் உடல்நிலை மற்றும் மனநல அளவை அளவிடுவதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.”

குறிப்பாக அபராதத்தை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வாகனம் ஓட்டுவதற்கு முன்னர் சாரதியின் உடல் தகுதி மற்றும் மனச் செறிவு ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

அதனை அவதானிப்பதற்காக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு.லசந்த அழகியவன்ன கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version