இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழக்கின்றமை மற்றும் பல்வேறுவிதமான பக்கவிளைவுகளை எதிர்கொள்கின்றமை தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த இரு வகையான மருந்துகளும் இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version