கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறைமையில் இருந்து 3,265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற, 1962 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் உப அலுவலகங்கள் இணையவழியில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த நபர்களின் கைரேகைகளை ஏற்றுக்கொள்ளும் பணியை இன்று ஆரம்பித்துள்ளது.

Share.
Exit mobile version