ஹிஜ்ரி 1444 துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (19) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டளவியல் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் எப்பிரதேசத்திலாவது துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112 432110, 0777 316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.