இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொனராகலை புத்தல மற்றும் புத்தளம் ஆனமடுவ ஆகிய இடங்களில் இந்த விபத்துக்கள் நடந்துள்ளன.

புத்தல- கதிர்காமம் வீதியில் வெலிம்டுல்ல பிரதேசத்தில் குறுக்கு வீதியில் சென்ற லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே ஆனமடுவ நகருக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவவில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த ஒருவர் மீது மோதி புரண்டு எதிர் திசையில் வந்த லொறியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பாதசாரியும் இளைஞனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இரு வாகனங்களையும் ஓட்டியவர்கள் கவனமின்றி வாகனங்களை ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version