மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சீனிகம தேவாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவர் மீது பல துப்பாக்கிச் சூட்டுகளை நடத்தியபோது, முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version