பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர்கள் அன்மையில் பொலிஸ் மா அதிபர் திரு. விக்கிரமரத்தினவைச் சந்தித்து இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமை காலத்தில் மதக் கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் முஸ்லிம்கள் ஆடு மாடுகளை போக்குவரத்து செய்யும் விஷயத்தில் தற்போது அமுலில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ் அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்குமாறு கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version